பிரதேச செயலாளருக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி தனது நிறைவான சேவையை போரதீவுப்பற்று பிரதேச மக்களுக்கு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் செல்வி. ஆர். ராகுலநாயகி அம்மணி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனை முன்னிட்டு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் 2023.07.31ஆம் திகதி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சசிகுமார், கணக்காளர் திரு. தி. அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி. உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆகியோர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும், கிளைத்தலைவர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய சகல அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுடன் வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளருடன் பிரியாவிடையையும் பகிர்ந்து கொண்டனர்.















