-
විස්තර
-
ප්රවර්ගය: News & Events
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்-2026 இனை முன்னிட்டு முதலாம் நாள் நிகழ்வு இன்று(27) மு.ப 9.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு.S.கமல்ராஜ் அவர்களது தலைமையில் பிரதேச செயலக வாளாகத்தில் இடம்பெற்றது.

மேலும் இத்தேசிய நேர்மை வாரம், 2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் நேர்மை சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதுடன் அரச சேவையில் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவையை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது