77வது சுதந்திர தின நிகழ்வு
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் சுதந்திர தின விசேட உரையுடன் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. சசிகுமார், கணக்காளர் திரு. தி. அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி. உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. ஜெயராஜா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அ. குககுமாரன் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.














